Showing posts with label Tamil stories. Show all posts
Showing posts with label Tamil stories. Show all posts

Wednesday, August 28, 2024

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

 நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன் வளர வளர அவனுக்கு அரண்மனை மிகவும் போர் அடிக்க ஆரம்பித்தது. பெரிதாக எந்த வேலையும் அவனுக்கென்று இல்லாதது ஆச்சர்யமாக உணர்ந்தான்.


அரண்மனையில் வேலை செய்யும் அனைவருமே பரபரப்பாக இருந்தார்கள். இளவரசன் தான் இப்படி சும்மா அங்கும் இங்கும் நடந்து செல்கிறோம் அவ்வளவுதானே என சலித்து கொண்டான். மற்றவர்கள் ஏன் இப்படி பரபரப்பாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அங்கு சென்றால் அவர்கள் இளவரசர் வந்துவிட்டார் என எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக நின்று விடுகிறார்கள். அது இளவரசனுக்கு மேலும் கடுப்பை கொடுத்தது. இதற்கு முடிவு கட்ட நினைத்த இளவரசன் சமையலறை எப்போதுமே பரபரப்பாக இருக்கிறது. அதனால் அங்கு செல்லலாம் என முடிவு செய்தான். ஆனால் இந்த முறை இளவரசனாக அல்லாமல் சமையலறையில் எடுபுடி வேலை செய்யும் பையனை போல மாறு வேடம் போட்டு சென்றான். அங்கு உள்ளே நுழைந்ததும் ஒரு 10, 15 பேர் அதிரடியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். என்னடா இது? நமக்கு ஒரு வேலை இல்லை இவர்கள் நிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள் என யோசித்து கொண்டே இருந்தான். அவன் அருகில் இருந்த ஒருவன் என்னடா வேடிக்கை பார்க்கிறாய், இளவரசர் உணவருந்த அந்த வெள்ளி தட்டுகளை சுத்தம் செய் என்றான்.

ஒரு தட்டில் தானே சாப்பிட போகிறார் அதற்கு ஏன் இவ்வளவு சுத்தம் செய்ய வேண்டும் என்றார் இளவரசன். அதற்கு எதிரில் இருந்தவன் ஆனால் அவர் எந்த தட்டில் சாப்பிடுவார் என தெரியாது ஆகையால் மேஜையில் தட்டுகள் நிறைந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்றான்.

அதை கழுவி முடிப்பதற்குள் ஆரஞ்சு மற்றும் திராட்சை பழங்களை வைத்து தோல்களை நீக்க சொன்னான். அதற்கு திராட்சை தோல்களையுமா என்று கேட்டான் இளவரன். ஆமாம், திராட்சை தோல்கள் அவர் வாயில் சிக்கினால் எதிரில் இருப்பவன் செத்தான் என்றான். இளவரசன் யோசிப்பதற்குள் உடைகளை துவைத்து காயவைத்து சரியாக மடித்து இருக்க வேண்டும் என ஒருவன் துணி மூட்டையை கொடுத்தான்.

தன்னைத்தானே திட்டி கொண்டு அந்த வேலைகளை செய்து முடித்தான். அதற்குள் இளவரசர் உணவில் இருக்கும் சீரகத்தை தனியாக எடுக்க வேண்டும் என்றான் ஒருவன். கண்கள் பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்தான் இளவரசன். ஏன்.. ஏன் என்றான். அதற்கு அருகில் இருந்தவன் அவருக்கு உணவில் சீரகம் இருப்பது பிடிக்காது என்றான். அப்படியென்றால் அதை போடாமல் சமைக்கலாமே என்றான் இளவரசன். அப்படி செய்தால் ருசி இல்லை என பயங்கரமான தண்டனைகளை கொடுப்பார் என்றான். அவ்வளவு கொடுமைக்காரனா என இளவரசன் கேட்க, கொஞ்சம் சோம்பேறி அவ்வளவுதான் என சொல்லி முடித்தான். இளவரசனுக்கு ஒரு வேலை இல்லாமல் இவர்களே செய்து முடித்தால் நான் என்ன செய்வேன் என் பொழுதை போக்க என யோசித்து கொண்டே தனது அறைக்கு வந்தான். கொஞ்ச நேரத்திலே உணவு தயார் என செய்தி வர காலையில் இருந்து வேலை செய்த அலுப்பில் இருந்தான் இளவரசன்.

அந்த சோர்வான முகத்துடன், அவன் முன் வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டான். இதில் இருக்கும் சின்ன சின்ன உழைப்பும் அவன் கண் முன் வந்தது. அங்கிருந்த வேலையாட்களிடம் கனிவாக பேச ஆரம்பித்தான். அவனிடம் ஏதோ மாற்றம் இருப்பதை பணியாட்கள் புரிந்து கொண்டார்கள். அதன்பிறகு அவன் பல வேலைகளை தானே செய்து கொண்டான். இதனால் அவன் மனது நிம்மதியாக இருந்தது. சும்மா இருப்பதாக எந்த எண்ணமும் அவனுக்கு தோன்றவில்லை.


Tuesday, August 27, 2024

அம்மாவின் செயலால் அதிர்ந்த குழந்தைகள்.. உங்களுக்கு இப்படி நடந்திருக்கா?

 லில்லி, ஜிம்மி ரெண்டு பேருமே இரட்டையர்கள். நன்றாக படிக்க கூடியவர்கள். லில்லி சமத்து பெண். ஜிம்மி சுட்டி பையன். இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள், ஒன்றாக கதை படிப்பார்கள். எடுத்து செய்தாலும் ஒன்றாகவே செய்வார்கள்.


அவர்களின் வீட்டின் எதிர்புறம் புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது. அந்த வீட்டில் ஸ்டீபன் என்ற சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் துரு துறுவென இருக்கும் சிறுவன். ஒருநாள் லில்லியின் அம்மா ஜிம்மி மற்றும் லில்லி இருவரையும் கடைக்கு செல்ல போகிறேன் வாருங்கள் என அழைத்தார். ஆனால் லில்லி புத்தகம் படித்து கொண்டிருந்ததால் வரவில்லை என மறுத்துவிட்டாள். அம்மா, ஜிம்மி நீயாவது அம்மாவுடன் வரலாம் இல்லையா என கேட்க, நானும் லில்லியுடன் படிக்க போகிறேன் என அங்கிருந்து ஓடி லில்லியிடம் சென்றான். சரி லில்லி, நீ படித்து முடித்த பிறகு சொல் நாம் போகலாம் என்றார் அம்மா. ஆனால் லில்லிக்கு கடைக்கு போக விருப்பம் இல்லாததால் வரவில்லை ஹோம் ஒர்க் இருக்கு என சாக்கு சொல்ல ஆரம்பித்தாள். அம்மாவும் வேறு வழி இல்லாமல் கடைக்கு சென்றார்.

அவர்கள் இருவரும் புத்தக படிப்பில் மூழ்கினர். திடீரென அவர்களுக்கு தோட்டத்தில் ஒரு சத்தம் கேட்டது. என்னடா அது என ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அவர்களின் சைக்கிளை யாரோ ஒரு பையன் ஓட்டுவதை கண்டார்கள். இது அவன்தான் என கத்திகொண்டே, வேகமாக தோட்டத்தை பார்த்து ஓடினார்கள். பார்த்தால் வாசலில் அம்மா, அவனை பார்த்து சிரித்து கொண்டிருக்க என்ன இது அம்மா நமது சைக்கிளை அவன் ஓட்டுவதை பார்த்தும் திட்டவில்லை என யோசித்தனர். அம்மா கடைக்கு போகவில்லையா என லில்லி கேட்க, என்ன படித்து முடித்துவிட்டீர்களா? என் அம்மா கேட்டார். இல்லை இல்லை அது தோட்டத்தில் இருந்து சத்தம் வந்தது, அது எங்களது சைக்கிள் என சொல்லி முகத்தை தொங்க போட்டார்கள். ஓ, அதுதான் விஷயமா? வேறு ஒன்றுமில்லை. அவன் பக்கத்து வீட்டு ஸ்டீபன், புதிதாக வந்துள்ளார்கள். நான் கடைக்கு போய்விட்டு பொருட்களை தூக்கி கொண்டு நடக்க கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்தேன். அப்போது ஸ்டீபன் அதை பார்த்து ஓடி வந்து உதவினான்.

நானும் எதாவது வேணுமா என்று கேட்டேன், அவன் ஏதும் வேணாம் என சொல்லி விட்டான். அப்போதுதான் அவனின் அம்மா சொன்னார், ஸ்டீபன் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கில்லாடி என்று. சரி எது வேண்டுமென்றாலும் கேட்டுக்கொள் என ஸ்டீபனிடம் கேட்டேன். அவன் அந்த சைக்கிளில் ஒரு ரவுண்ட் கேட்டான் அதான் கொடுத்தேன் என சொல்ல இருவர் முகமும் வாடியது. அப்போது ஸ்டீபன் அங்கு வந்து, இந்த சைக்கிளை நான் வைத்து கொள்ளவா? இது இருந்தால் என்னால் என் பாட்டிக்கும் கடையில் பொருட்கள் வாங்கி தர முடியும் என்றான். அம்மா சரி என தலையை ஆட்ட முற்படுவதற்குள், லில்லி மற்றும் ஜிம்மி சட்டென ஒரே குரலில் முடியாது என்றனர். அம்மா அதிர்ந்து போய் இருவரையும் பார்க்க, சாரி அம்மா.. நங்கள் உதவி இருக்க வேண்டும் அது எங்கள் தவறுதான். இனிமேல் உங்களுடன் கடைக்கு நாங்களும் வருகிறோம் என்று சொன்னார்கள். அவன் உதவி செய்ததற்காக வேண்டுமென்றால் இன்னும் 2,3 ரவுண்ட் அடித்து விட்டு தரட்டும் என சொன்னார்கள். அம்மாவும் தந்து குழந்தைகளை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டார். உங்கள் வாழ்க்கையில் இப்படி எதுவும் நடந்திருக்கா, அப்போ நீங்க என்ன பண்ணீங்க.. கமெண்ட்டில் சொல்லலாம்.


புத்தகத்தை பறிகொடுத்த நண்பர்கள்.. இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கலையே!

 ஆலன் வேகமாக ஓடிவந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில நின்றான். டேய், இந்த ஜெப் என்னோட அட்வெஞ்சர் புக் வாங்கினான், படிச்சிட்டு தருவான்னு நினைத்து குடுத்த தரவே மாற்றான் என்று சொல்ல, அட என்னோட புக் 5 அவன் கிட்ட இருக்கு இன்னும் தரள என்றான் டிக். அந்த நேரம் ஜெப் அங்கு வர, டேய் அந்த புக்கை எப்போ தருவ என ஆலன் கேட்க, நாளைக்கு என்று நிற்காமல் பதில் சொல்லி கிளம்பினான் ஜெப்.


அதெல்லேம் உனக்கு கிடைக்காது என சிரித்து கொண்டே சொன்னாள் எல்லி. ஏன் அப்படி சொல்ற, எனக்கும் இதைத்தான் சொல்றான். ஆனா தர மாற்றான், நீ வேணுனா நாளைக்கு பாரு மறந்துட்டேன்னு சொல்லுவான் என்றாள் எல்லி. மறுநாள் ஜெப் புத்தகம் எங்கே என ஆலன் கேட்க, ஸ்கூல் புக் ஓவர் வெயிட் ஆ இருக்கு அதனால எடுத்துட்டு வர முடியல, நாளைக்கு தரேன் என்றான். இதை கேட்டதும் ஆத்திரம் அடைந்த டிக் என்னோட புக் எப்போடா தருவ, எவ்ளோ நாள் ஆச்சு நீ வாங்கிட்டு போய் என்றான். சீக்கிரம் டா படிச்சி முடிக்கலை என சொல்லிக்கொண்டே நடந்தான். அவன் வகுப்பில் இதே போல பலரிடமும் புத்தகம் வாங்கி திருப்பி தராமல் ஏமாத்தி இருப்பதை தெரிந்து கொண்ட டிக்க்கும் ஆலனும் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என யோசித்தார்கள். டிக் ஆலனை அழைத்து கொண்டு, ஜெப் வீட்டிற்கே சென்றான். ஜெப் அம்மா கதவை திறக்க, அவன் இல்லையேப்பா என்று சொன்னதும் , டிக் சொன்னான் ஜெப் புக் வாங்கிட்டு தரவே இல்லை கேட்டாலும் சாக்கு சொல்கிறான் நாங்க எடுத்துக்கலாமா என கேட்க, அட இந்த பையன் ஏன் இப்படி செய்தான் என வருத்தப்பட ஜெப் அம்மா எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.

மாடியில் அவன் அறைக்கு சென்ற டிக், ஆலன் வாயை பிளந்து பார்த்தார்கள். ஒரு பெரிய புக் ஷெல்ப் இருந்தது. இதோ என்னோட அட்வெஞ்சர் புக் என ஆலன் எடுக்க, டிக் அவனது 5 புத்தகத்தையும் தேடி எடுத்தான். அப்படியே எல்லி புத்தகத்தை தேட, அதில் டாம், நோரா, ஜெர்ரி என அவங்க வகுப்பு மட்டுமில்லாமல் மற்ற வகுப்பில் உள்ள பலரின் புத்தகமும் இருந்தது. அதை எல்லாம் இவர்களால் தனியாக எடுத்து வர முடியாது. அதனால் தள்ளு வண்டி ஒன்றை தேட டிக் கீழே சென்றான்.

மொத்தம் 37 புத்தகங்கள் அதை எடுத்து கீழே கொண்டு வந்தான் ஆலன். இதை பார்த்த ஜெப் அம்மா இது எல்லாமே உங்களுடையதா என கேட்க, நண்பர்களுடையதும் இருக்கிறது எதையுமே அவன் திருப்பி கொடுக்கவில்லை என சொல்ல, அம்மா அதிர்ந்து போனார். அப்போ அவன் ஷெல்ப்பில் புத்தகம் எதுவுமே இல்லையா என கேட்க ஒரு 5 புத்தகங்கள் அவனையுடையதாக இருக்கலாம் என்றான் ஆலன். டிக் தள்ளுவண்டி கொண்டு வர, அதில் எடுத்து வைத்துவிட்டு ஜெப் அம்மாவிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்கள். வெளியில் விளையாட சென்ற ஜெப் திரும்பி வர அவன் அறைக்கு சென்றான். அவன் புத்தக ஷெல்ப்பில் புத்தகங்களை காணவில்லை என் கத்த, அம்மா ஓடி வந்து நீ நண்பர்களின் புத்தகத்தையா வைத்திருந்தாய் என திட்ட இல்லையே என்றான் ஜெப். உன் நண்பர்கள் டிக் ஆலன் இருவரும் வந்து அவர்களுடையது என எடுத்து சென்று விட்டார்கள், நீ அவங்க கிட்ட போய் எது வேண்டும் என்றாலும் கேட்டுக்கோ என்றார். மறுநாள் பள்ளிக்கு சென்ற ஜெப், அவர்கள் இருவரையும் தேட அவர்கள் புத்தகத்தை யார் சொந்தக்காரர்களோ அவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தார்கள். கோவமாக போன ஜெப் இதெல்லாம் என் புக், நீ எப்படி அவங்ககிட்ட கொடுக்க முடியும் என கேட்க, ஓ அப்படியா, சரி புத்தகத்தை திறந்து முதல் பக்கத்தை பார் என அவனிடம் நீட்டினான் ஆலன். அதில் யார் பெயர் இருக்கிறது என கேட்க லின்சி என்றான் ஜெப். டிக் அவனிடமிருந்த புக்கை பிடிங்கி லின்ஸ்யிடம் கொடுத்தான்.

அப்படி வரிசையாக எல்லா புத்தகத்திலும் அவர்களது பெயர் முகவரி இருந்தது. இதை பார்த்து ஷாக் ஆனான் ஜெப். இவன் அதை எதிர்பார்க்கவில்லை. புத்தகத்தில் பெயர் இருக்க இல்லையா என்பது கூட தெரியவில்லை. அப்படி என்றல் நீ எதையுமே திறந்து கூட பார்க்கவில்லை என ஆலன் கேட்க, டிக் அவனை கேலி செய்தான். ஜெப் அங்கிருந்து வேகமாக ஓடினான். இதைவைத்து அவனை யாரும் கேலி செய்ய கூடாது என ஆலன் கேட்டுக்கொள்ள அதே போல யாரும் அவனை கேலி செய்யவில்லை. ஜெப் அதன் பிறகு யாரிடமும் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதிலாக 2 புத்தகங்கள் அவன் அம்மா கொடுத்த பாக்கெட் மணியில் வாங்கி வைத்திருந்தான்.

உங்கள் நண்பர்கள் யாராவது புத்தகத்தை திருப்பி கொடுக்காமல் இருந்திருக்கிறார்களா? அப்போ நீங்க என்ன பண்ணீங்க. உங்கள் அனுபவத்தை இங்கு பகிரலாம். 

இப்படி ஒரு வாழ்க்கையா? அலுத்து கொண்ட முயல்கள்!

 தலை தெறிக்க ஒரு முயல் காட்டுக்குள் ஓடி வர, பின்னால் ஏதோ ஒரு மிருகம் விரட்டுவது போல மரம், செடி, கொடிகள் ஆட முயல் ஒரு இடத்தில் நின்று அதன் கூட்டத்தை அழைக்கிறது. உயிரை கைல பிடிச்சிட்டு ஓடி வந்திருக்கேன். என்னால் இப்படி பயந்தெல்லாம் வாழ முடியாது என கத்துகிறது.


முயல் இப்படி கத்தி கூச்சலிடுவதை கேட்ட மொத்த முயல் கூட்டமும் பதறி போய் வெளியில் வந்தன. ஓடி வந்த முயல் கூச்சல் இட்டு கொண்டிருக்கும்போதே இன்னொரு முயலும் தலை தெறிக்க ஓடி வர அதன் கழுத்து மற்றும் கால்களில் ரத்தம் கொட்டியது. அதற்கு மருந்து கொண்டு வந்து கொடுப்பதற்குள் அது இறந்தும் போனது. இதை பார்த்து கொண்டிருந்த தலைவன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ன செய்யலாம் என தனது கூட்டத்தை பார்த்து கேட்டது. ஆளுக்கொரு யோசனை சொல்ல, எதுவும் தலைவருக்கு சரியாக தோன்றவில்லை. முதலில் ஓடி வந்த முயல் இதெல்லாம் சரியாக வராது. நாம் இருந்தால் தானே இவர்கள் நம்மை கொல்ல துடிப்பார்கள். நாமும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓட வேண்டாம் என சொல்ல மத்த முயல்களும் ஆமாம் நாம் என் வாழ வேண்டும், மற்றவர்களுக்கு இரையாக வேண்டும். தினம் தினம் உயிருக்காக போராட வேண்டும் இதற்கு நாம் அனைவரும் இறப்பதே சிறந்த வழி என ஒன்றாக முடிவெடுக்க, தலைவரும் சரி என ஏற்று கொள்கிறார்.

சரி அப்போ நாளை காலை எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அருகில் இருக்கும் குளத்தில் விழுந்து இறக்கலாம் என முடிவு செய்து, ஒரு கூட்டமே கிளம்பியது. குளத்தை நோக்கி வேகமாக படையெடுக்க செடி கொடிகள் அசைய, அந்த இடமே பயங்கர சத்தத்துடன் அதிர ஆரம்பித்து.

குளத்தின் அருகில் கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் ஏதோ பயங்கரமான விலங்கு கூட்டம் வருகிறது போல என பயந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, முயல் கூட்டத்தின் இந்த செயல் அங்கிருந்து சின்ன சின்ன உயிரினங்கள் அனைத்தையும் பயந்து தலை தெறிக்க ஓட வைத்தது. கூட்டமாக பேசி கொண்டிருந்த தவளைகள் குளத்தில் வேகமாக குதிக்க ஆரம்பித்தன. இதனால் குளத்தில் இருந்த மீன்கள் வேகமாக ஆழமான இடத்திற்கு சென்றன.

இதை பார்த்த முயல் கூட்டத்தின் தலைவன் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகினான். தனது கூட்டத்தை ஒரு நொடி நிற்க சொன்னான். குளத்தின் அருகில் இருந்த சிறு உயிரினங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தாங்கள் ஓடியதை போலவே இருந்ததை உணர்ந்தது.

தனது கூட்டத்திடம், நாம் எந்த உயிருக்கும் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. ஆனாலும் அவை நம்மை பார்த்து பயப்பட ஆரம்பித்தன. ஆக இதுதான் வாழ்க்கை. இதை வாழ நாம் அன்றாடம் ஓடியாக வேண்டும். நாம் மட்டுமில்லை இங்கு வாழும் அனைவருமே ஓடியாக வேண்டும். அப்படியென்றால் இருக்கும் இந்த நொடியை நாம் அனுபவித்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று தலைவர் கூறியதும் முயல்களுக்கு தாங்கள் தவறான முடிவை எடுத்தது புரிந்தது. அது போல இறப்பு எதற்கும் தீர்வு கிடையாது என்பதையும் புரிந்து கொண்டன.


அந்த மூதாட்டியா இது? ஷாக் கொடுத்த இளவரசி!

 நாட்டின் அரசன் பக்கத்து நாட்டு இளவரசர்களுக்கு ஒரு ஓலை அனுப்ப அதில் தனது மகளுக்கு வரன் பார்ப்பதாகவும் தகுதியுள்ளவர்கள் அரண்மனையில் தங்கி விருந்து உண்டு செல்லலாம். இளவரசிக்கு யாரை பிடிக்குதோ அவரை மணம் முடிப்பார் என இருந்தது.

இந்த ஓலை கிடைத்த அரசர்கள், இளவரசர்கள் என பலரும் அந்த ராஜ்யத்திற்கு வந்தார்கள். அரண்மனைக்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் அவர்களை பார்த்து பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு விருந்து உபசரணைகளை செய்து கொடுத்தார். அவர் யார் என யாருக்கும் தெரியாததால் பணிப்பெண் என நினைத்து கொண்ட இளவரசர்கள் இளவரசிக்காக காத்து கொண்டிருந்தார்கள். ஆனால் முதல் நாள் இளவரசியை யாருமே காணவில்லை. மறுபடியும் ஒரு பெரிய மேலங்கியை அணிந்து வந்த அதே வயதான பெண்மணியை தான் அனைவரும் பார்த்தார்கள். அரசரை தேடி சென்று இளவரிசியை எப்போதுதான் காண்பிப்பீர்கள், வெகு தொலைவில் இருந்து நாங்கள் வந்துள்ளோம் என கோவமாக கடிந்து கொள்ள, அரசரோ என் மகள் தினமும் உங்களை காண்கிறாள். நீங்கள் எப்படி பார்க்காமல் இருந்தீர்கள் என்று கேட்டார்.

எது! இளவரசியா தினமும் ஒரு வயதான கிழவியை தான் பார்க்கிறோம். இங்கு எந்த இளவரசியும் இல்லை என்று சத்தமாக சொல்ல அரசர் தனது மகளை வரவழைத்தார். வந்தது அதே வயதான பெண்மணி தான். அதிர்ச்சி ஆன இளவரசர்கள் இதுதான் இளவரசியா என கோவமாக கேட்க ஆமாம் என்றார் அரசர். ஆத்திரமடைந்த இளவரசர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பினார்கள்.

அரசர் இதை எதையுமே பெரிதாக எடுத்து கொள்ளாமல், அடுத்த ஓலையை இன்னும் சில நாடுகளுக்கு அனுப்பினார். இந்த முறை இளவரசி அவர்களை வரும் வழியிலே பார்த்து பிச்சை கேக்கும் பெண்ணை போல நடந்து கொண்டாள். அவள் எதிர்பார்த்த மாதிரி யாருமே வரவில்லை. வந்தவர்கள் பெரும்பாலும் பிச்சை வேணுமா உனக்கு என அவளிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். அந்த நேரம் இளவரசன் ஒருவன் இவளை பார்த்ததும் பிடித்து கீழே தள்ளிவிட்டு அரண்மனை நோக்கி சென்றான். அங்கு விருந்தை உண்ண அமர்ந்தான். அவனுக்கு எல்லா உணவுகளுமே கசந்தது. கோவப்பட்டு எழுந்தவனை வயதான இளவரசி நீ ஒரு வயதான பிச்சைகாரிக்கு உணவளிக்க முடியவில்லை என்றால் உன்னால் ஒரு நாட்டு மக்களை எப்படி பார்த்துக்கொள்ள முடியும் என திட்டி அனுப்ப, அந்த சமயம் இன்னொரு இளவரசன் அரண்மனையில் நுழைகிறான்.

இளவரசி தேடும் ஒரு பண்பாளனாக தன்னை அவளிடம் நிலை நிறுத்தினான். அவள் வைத்த அறிவார்ந்த போட்டிகளில் இளவரசி எதிர்பார்த்த பதில்களை சொல்லி அசத்தினான். சரி கடைசி கேள்வி, ஏன் வயதான தோற்றமுடைய என்னை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என இளவரசி கேட்க, உங்கள் மனது வைரம் போன்றது. வெளி தோற்றம் பெரிய விஷயமே இல்லை, எங்கள் நாட்டில் கைதேர்ந்த மருத்துவர்கள் உள்ளார்கள் என்னால் சரியாக்க முடியும். இல்லை என்றாலும் எனக்கு கவலை இல்லை என சொல்ல, இளவரசி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். தந்தையிடம் சொல்லி திருமண விருந்தை ஏற்பாடு செய்தாள். இதற்குமுன் இவளை ஏளனமாய் பார்த்த அனைத்து இளவரசர்களையும் வரவழைத்தாள். மணப்பெண்ணாக தயார் ஆன இளவரசி, இளவரசனின் கைகளை பிடித்து கொண்டு அரண்மனையில் நடந்து வர பலரும் கேலி செய்து சிரித்தார்கள். அவள் அந்த மேலங்கியை கழட்டாமல் நடந்து வந்து மேடை ஏறியதும் தனது கணவர் மற்றும் மற்ற அரசர்கள் முன்னிலையில் அந்த மேலங்கியை கழட்ட அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்தது.

ஆமாம் இளவரசி தற்போது வயதான மூதாட்டி தோற்றத்தில் இருந்து அழகான இளம் பெண்ணாக மாறி இருந்தார். அந்த மேலங்கிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது என அரசர் சொல்ல, அனைவரும் வாயடைத்து போனார்கள்.


பாட்டியை ஏமாற்றிய காக்கா.. இவரையும் விட்டுவைக்கலையா!

 ராஜ்ஜியத்தின் அரசர் தனது நாட்டை மிகவும் வளமாக வழி நடத்தினார். அவருக்கு மக்கள் மட்டுமில்லாமல் தனது நாட்டை சுற்றி இருக்கும் காடுகளும் வளமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்து வந்தார். அங்கு இருக்கும் விலங்குகளும் மன நிறைவாக கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்றனவா என அரசருக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது.


அப்போது காட்டுக்கே சென்று அதை தெரிந்துகொள்ள முடிவு செய்த அரசர், அங்கு சென்றதும் ராஜாவாக சிங்கம் கட்டுப்பாடுகளை வைத்து வழி நடத்துவதை பார்த்து பெருமிதம் கொண்டார். பின்னர் அங்கு நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்த அரசருக்கு எல்லா விலங்கினங்களும் சிங்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது தெரிந்தாலும் பறவைகள் சரியாக கட்டுப்படவில்லை என்பதை புரிந்து கொண்டார். ராஜ்ஜியத்திற்கு சென்று முதல் வேலையாக அறிக்கை ஒன்றை அறிவித்தார். அதில் நாட்டின் மக்களை வழிநடத்த நான் அரசனாக இருக்கிறேன். அதே போல காட்டில் ராஜாவாக சிங்கம் விலங்குகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் பறவைகள் சரியாக கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகையால் ராஜ்ஜியத்தில் உள்ள அணைத்து பறவைகளும் நாளை அரண்மணை கார்டனில் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது.

இந்த அறிவிப்பை கேட்டதும் பறவைகள் என்னவாக இருக்கும் என பயந்து போய் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டன. அங்கு காகமும் தனது கூட்டத்துடன் செல்ல மற்ற பறவைகள் வண்ண மயமா இருக்கும்போது காகம் மட்டும் கருப்பாக இருப்பதை பார்த்த மற்ற பறவைகளை காக்கை கூட்டத்தை ஏளனமாய் பார்த்தது.

அரசர் அந்த சமயம் அங்கு வர, சல சலப்பாய் இருந்த பறவைகள் கூட்டம் அமைதியாய் ஆகின. அரசர் அறிக்கையில் சொன்னவாறு பேச, பறவைகள் ஒரு சத்தமும் இல்லாமல் அடுத்து என்ன என்று கேட்டுக்கொண்டிருக்க, உங்களுக்குள் ஒருவரை அரசராக தேர்ந்தெடுக்க போகிறேன். அவர் சொல்வதுதான் இனி உங்களுக்கு வழிமுறை நாளை மறுநாள் மீண்டும் இங்கு வாருங்கள் என சொன்னதும் பறவைகள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு அங்கிருந்து சென்றன. அரசர் யாரை தேர்ந்தெடுக்க போகிறார் என மொத்த பறவைகள் கூட்டம் காத்திருக்க அந்த நாளும் வந்தது. அரசரை காண பறவைகள் செல்ல, வண்ணங்கள் நிறைந்த ஒரு வினோதமான பறவையை அரசர் அன்று கூட்டத்தில் பார்த்தார். பார்த்ததும் அவருக்கு அதன் மேல் ஈர்ப்பு ஏற்பட, அதை பறவைகள் இனத்திற்கு அரசராக அறிவித்தார். யார்டா இவன் புதிதாக இருக்கிறான் என பறவைகள் அந்த புதிய பறவை மீது கோவப்பட அரசர் அங்கிருந்து அனைவரையும் கலைந்து போக சொன்னார். பறவைகள் கூட்டத்தை கூட்டி வழிமுறைகளை அறிவிக்க பறவையின் அரசர் ஒரு இடத்தை சொல்ல எல்லா பறவைகளும் அங்கு கூடின. ஆனாலும் இதன் இறக்கைகள் பல பறவைகள் உடையது போல இருந்ததை கவனித்த சில பறவைகள் அரசர் என்றும் பாராமல் அதன் மேல் துருத்தி கொண்டிருந்த ஒரு சிறகை பிடுங்க அது கையோடு வந்தது. இதை பார்த்த மற்ற பறவைகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இவன் உண்மையில் வண்ண பறவையே இல்லை என மற்ற சிறகுகளையும் பிடுங்க அது ஒரு காகம் என வெட்ட வெளிச்சமானது. இதை பொருட்படுத்தாத காகம் நான் தான் அரசன் என் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என தீர்மானமாக சொன்னது. மற்ற பறவைகளை மட்டுமில்லாமல் அரசரையும் காகம் ஏமாற்றியது தெரியவந்தது. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காகமும் பறவைகள் கூட்டத்தை சிறப்பாக வழிநடத்தியது. அதனால் அதை கேலி செய்த பறவைகள் கூட்டம் மனம் வருந்தின.


மரம் வெட்டியின் பேச்சை கேட்டு.. மோசம் போன சிங்கம்!

 ஒரு பெரிய காட்டிற்கு பக்கத்திலே ஒரு கிராமம் இருந்து வந்ததது. அந்த கிராம மக்கள் தங்கள் உணவுக்கான தேவைகளை அருகில் இருந்த காட்டில் இருந்து எடுத்து தீர்த்து கொண்டார்கள். உதாரணமாக பழங்களை பறித்து கொள்ள, மரங்களை வெட்டி விறகுகளை விற்று தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.


மனிதர்கள் காட்டுக்குள் நடமாடுவது தெரிந்தும் விலங்குகளும் தங்களுடைய வாழ்க்கையை நேர்த்தியாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் வாழ்ந்து வந்தன. மக்கள் காட்டுக்குள் வந்தாலும் அவர்களை தாக்குவதில்லை. அதனால் மக்களும் விலங்குகளிடத்தில் எந்த அச்சமும் இல்லாமல் இருந்தார்கள். காட்டுக்குள் எப்போது வேண்டுமென்றாலும் போய் வந்தார்கள். விலங்குகளும் கிராமத்திற்குள் அவ்வவ்போது நடமாடும்.

அந்த கிராமத்தில் ஒரு ஏழை மரவெட்டி வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் தனது தந்தையுடன் விறகுகளை எடுத்துவர உதவியாக இருப்பாள். மிகவும் அழகானவள் மற்றும் அன்பானவள். ஒருநாள் தந்தையுடன் காட்டில் இருந்து விறகு எடுத்து வர சென்றாள். அப்போது அந்த பக்கமாய் சென்ற சிங்கம் மரவெட்டியின் மகளை கவனித்தது.


ஒரு நொடி நின்று அவளை பார்த்த சிங்கத்திற்கு அவளின் அழகின் மேல் ஆசை ஏற்பட, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததது. மறுநாளே மரவெட்டியின் வீட்டிற்கு சென்று உன் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என பெண் கேட்டது. பதறிப்போன மரவெட்டி, தன் பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டே ஒரு காட்டின் அரசனே என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றான்.


ஆர்வம் அதிகமாகி, என்னவாக இருக்கும் என யோசித்துகொண்டே சிங்கம் மரவெட்டியை பார்க்க, சிங்கத்திடம் இருந்து தன் மகளை காப்பாற்ற ஒரு வேண்டுகோல் வைத்தான். அதாவது நீங்கள் ஏற்கனவே அரசராக இருக்கிறீர்கள், ஆகையால் உங்களுக்கு பயந்து தான் இங்கு அனைவரும் இருக்கிறார்கள். அதனால் உங்கள் தலையில் இருக்கும் இந்த படர்ந்த முடியை வெட்டி , பயங்கரமாக தெரியும் இந்த பற்கள் மற்றும் உங்கள் நகங்கள் என அவற்றையும் வெட்டி நேர்த்தியாக வந்தால் என் பெண்ணை மணமுடித்து தருகிறேன் என்றான்.

சிங்கம் தான் விருப்பப்பட்ட பெண் கிடைக்க போகிறது என சந்தோஷத்தில் திரும்பி சென்று மரவெட்டி சொன்னது போலவே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறோம் என நினைத்து கொண்டு மறுநாள் மரவெட்டி வீட்டிற்கு வந்தது. மரவெடியை அழைத்து நீ கேட்டது போலவே நான் அனைத்தையும் செய்துவிட்டேன். இப்போது உன் பெண்ணை திருமணம் முடித்து கொடு என்று கேட்க, பல்லில்லாத சிங்கத்தை பார்த்த மரவெட்டி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தே விட்டான். புரியாமல் விழித்து கொண்டிருந்த சிங்கத்தை ஒரு கட்டையை கொண்டு அடித்தே துரத்தினான். உனக்கு என் மகள் வேணுமாடா என பயங்கரமாக அடித்து விரட்டினான். தன்னை அந்த மரவெட்டி ஏமாற்றியதை நினைத்து மனம் நொந்து அங்கிருந்து சிங்கம் கிளம்பியது.

ஆகையால் குழந்தைகளே நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் உங்களுக்கு ஒத்துவராத சிலவற்றில் தலையிடாமல் இருப்பதே சால சிறந்தது.


Monday, July 22, 2024

இந்தியாவின் முதல் சபாநாயகர் | Indiavin Mudhal Sabanayagar Yaar

 

வாசகர்களுக்கு வணக்கம்..! மக்களவை தலைவர் என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் மக்களவையை நடத்தும் தலைவரைக் குறிக்கும். மக்களவை உறுப்பினர்களால் மக்களவை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குடியரசு தலைவர் மக்களவைத் தலைவரின் தேர்தலை தீர்மானிக்கிறார். பேரவையே நடத்துவது, கண்காணிப்பது, மசோதாக்களை தீர்மானிப்பது, தீர்மானங்கள் இயற்றுவது போன்றவை  சபாநாயகரின் அதிகாரங்களாக உள்ளது. இப்பொழுது நாம் இந்த பதிவில் இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்..? அவர் பெயர் என்ன..? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

 

Indiavin Mudhal Sabanayagar Yaar – இந்தியாவின் முதல் சபாநாயகர்:

இவர் பம்பாய் மாகாணத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் மராத்திய குடும்பத்தில் 1888-ல் பிறந்தார்1908-ல் அகமதாபாத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின் பம்பாய் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து 1913-ல் வழக்கறிஞரா பணியாற்ற தொடங்கினார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போது காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரின் நட்புக்கு பிறகு ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றார்.

பம்பாய் மாகாண சட்டமன்றம் மற்றும் தேசிய சட்டமன்றத்திற்கும் 1937-ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 14-ம் தேதி 1947-ல் இந்திய சுதந்திரம் பெறப்போகும் நள்ளிரவு வரை தேசிய சட்டப்பேரவையின் தலைவராக இருந்தார். அதன் பிறகு பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் அப்பணியை நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது.

 

Indiavin Mudhal Sabanayagar Name – இந்தியாவின் முதல் சபாநாயகர்:

1949-ல் நாடாளுமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக இருந்தார், பின் 1952-ல் இயற்றப்பட்ட முதல் மக்களவைக்கு சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களவையில் இவர் ஆற்றிய பணி எண்ணற்றது. அவையை நடத்துவதும் மசோதாக்களை நிறைவேற்றுவதும் இவர் பணியாக இல்லாமல், மக்களவை உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு தந்து எவ்வித சண்டை சச்சரவு இல்லாமல் சிறப்பாக நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.

இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்? பெயர்:

பழைய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நடைமுறைகள், விதிகள், வழிமுறைகளை பின்பற்றாமல் புதிய சட்டம் பல இயற்றினார். அவையில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக கையாண்ட இவருடைய தீர்ப்புகள் இன்று வரை முன்மாதிரியாக உள்ளது. மக்களவை செயலகம் முழுமையடைய அவர் முழு பங்கு வகித்தார்.

இவருடைய பதவிக்கலாம்  1956-ல் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முடிவுக்கு வந்தது.

 

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed