Tuesday, August 27, 2024

அம்மாவின் செயலால் அதிர்ந்த குழந்தைகள்.. உங்களுக்கு இப்படி நடந்திருக்கா?

 லில்லி, ஜிம்மி ரெண்டு பேருமே இரட்டையர்கள். நன்றாக படிக்க கூடியவர்கள். லில்லி சமத்து பெண். ஜிம்மி சுட்டி பையன். இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள், ஒன்றாக கதை படிப்பார்கள். எடுத்து செய்தாலும் ஒன்றாகவே செய்வார்கள்.


அவர்களின் வீட்டின் எதிர்புறம் புதிதாக ஒரு குடும்பம் குடியேறியது. அந்த வீட்டில் ஸ்டீபன் என்ற சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் துரு துறுவென இருக்கும் சிறுவன். ஒருநாள் லில்லியின் அம்மா ஜிம்மி மற்றும் லில்லி இருவரையும் கடைக்கு செல்ல போகிறேன் வாருங்கள் என அழைத்தார். ஆனால் லில்லி புத்தகம் படித்து கொண்டிருந்ததால் வரவில்லை என மறுத்துவிட்டாள். அம்மா, ஜிம்மி நீயாவது அம்மாவுடன் வரலாம் இல்லையா என கேட்க, நானும் லில்லியுடன் படிக்க போகிறேன் என அங்கிருந்து ஓடி லில்லியிடம் சென்றான். சரி லில்லி, நீ படித்து முடித்த பிறகு சொல் நாம் போகலாம் என்றார் அம்மா. ஆனால் லில்லிக்கு கடைக்கு போக விருப்பம் இல்லாததால் வரவில்லை ஹோம் ஒர்க் இருக்கு என சாக்கு சொல்ல ஆரம்பித்தாள். அம்மாவும் வேறு வழி இல்லாமல் கடைக்கு சென்றார்.

அவர்கள் இருவரும் புத்தக படிப்பில் மூழ்கினர். திடீரென அவர்களுக்கு தோட்டத்தில் ஒரு சத்தம் கேட்டது. என்னடா அது என ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அவர்களின் சைக்கிளை யாரோ ஒரு பையன் ஓட்டுவதை கண்டார்கள். இது அவன்தான் என கத்திகொண்டே, வேகமாக தோட்டத்தை பார்த்து ஓடினார்கள். பார்த்தால் வாசலில் அம்மா, அவனை பார்த்து சிரித்து கொண்டிருக்க என்ன இது அம்மா நமது சைக்கிளை அவன் ஓட்டுவதை பார்த்தும் திட்டவில்லை என யோசித்தனர். அம்மா கடைக்கு போகவில்லையா என லில்லி கேட்க, என்ன படித்து முடித்துவிட்டீர்களா? என் அம்மா கேட்டார். இல்லை இல்லை அது தோட்டத்தில் இருந்து சத்தம் வந்தது, அது எங்களது சைக்கிள் என சொல்லி முகத்தை தொங்க போட்டார்கள். ஓ, அதுதான் விஷயமா? வேறு ஒன்றுமில்லை. அவன் பக்கத்து வீட்டு ஸ்டீபன், புதிதாக வந்துள்ளார்கள். நான் கடைக்கு போய்விட்டு பொருட்களை தூக்கி கொண்டு நடக்க கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்தேன். அப்போது ஸ்டீபன் அதை பார்த்து ஓடி வந்து உதவினான்.

நானும் எதாவது வேணுமா என்று கேட்டேன், அவன் ஏதும் வேணாம் என சொல்லி விட்டான். அப்போதுதான் அவனின் அம்மா சொன்னார், ஸ்டீபன் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் கில்லாடி என்று. சரி எது வேண்டுமென்றாலும் கேட்டுக்கொள் என ஸ்டீபனிடம் கேட்டேன். அவன் அந்த சைக்கிளில் ஒரு ரவுண்ட் கேட்டான் அதான் கொடுத்தேன் என சொல்ல இருவர் முகமும் வாடியது. அப்போது ஸ்டீபன் அங்கு வந்து, இந்த சைக்கிளை நான் வைத்து கொள்ளவா? இது இருந்தால் என்னால் என் பாட்டிக்கும் கடையில் பொருட்கள் வாங்கி தர முடியும் என்றான். அம்மா சரி என தலையை ஆட்ட முற்படுவதற்குள், லில்லி மற்றும் ஜிம்மி சட்டென ஒரே குரலில் முடியாது என்றனர். அம்மா அதிர்ந்து போய் இருவரையும் பார்க்க, சாரி அம்மா.. நங்கள் உதவி இருக்க வேண்டும் அது எங்கள் தவறுதான். இனிமேல் உங்களுடன் கடைக்கு நாங்களும் வருகிறோம் என்று சொன்னார்கள். அவன் உதவி செய்ததற்காக வேண்டுமென்றால் இன்னும் 2,3 ரவுண்ட் அடித்து விட்டு தரட்டும் என சொன்னார்கள். அம்மாவும் தந்து குழந்தைகளை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டார். உங்கள் வாழ்க்கையில் இப்படி எதுவும் நடந்திருக்கா, அப்போ நீங்க என்ன பண்ணீங்க.. கமெண்ட்டில் சொல்லலாம்.


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed