Wednesday, August 28, 2024

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

 நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன் வளர வளர அவனுக்கு அரண்மனை மிகவும் போர் அடிக்க ஆரம்பித்தது. பெரிதாக எந்த வேலையும் அவனுக்கென்று இல்லாதது ஆச்சர்யமாக உணர்ந்தான்.


அரண்மனையில் வேலை செய்யும் அனைவருமே பரபரப்பாக இருந்தார்கள். இளவரசன் தான் இப்படி சும்மா அங்கும் இங்கும் நடந்து செல்கிறோம் அவ்வளவுதானே என சலித்து கொண்டான். மற்றவர்கள் ஏன் இப்படி பரபரப்பாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அங்கு சென்றால் அவர்கள் இளவரசர் வந்துவிட்டார் என எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக நின்று விடுகிறார்கள். அது இளவரசனுக்கு மேலும் கடுப்பை கொடுத்தது. இதற்கு முடிவு கட்ட நினைத்த இளவரசன் சமையலறை எப்போதுமே பரபரப்பாக இருக்கிறது. அதனால் அங்கு செல்லலாம் என முடிவு செய்தான். ஆனால் இந்த முறை இளவரசனாக அல்லாமல் சமையலறையில் எடுபுடி வேலை செய்யும் பையனை போல மாறு வேடம் போட்டு சென்றான். அங்கு உள்ளே நுழைந்ததும் ஒரு 10, 15 பேர் அதிரடியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். என்னடா இது? நமக்கு ஒரு வேலை இல்லை இவர்கள் நிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள் என யோசித்து கொண்டே இருந்தான். அவன் அருகில் இருந்த ஒருவன் என்னடா வேடிக்கை பார்க்கிறாய், இளவரசர் உணவருந்த அந்த வெள்ளி தட்டுகளை சுத்தம் செய் என்றான்.

ஒரு தட்டில் தானே சாப்பிட போகிறார் அதற்கு ஏன் இவ்வளவு சுத்தம் செய்ய வேண்டும் என்றார் இளவரசன். அதற்கு எதிரில் இருந்தவன் ஆனால் அவர் எந்த தட்டில் சாப்பிடுவார் என தெரியாது ஆகையால் மேஜையில் தட்டுகள் நிறைந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்றான்.

அதை கழுவி முடிப்பதற்குள் ஆரஞ்சு மற்றும் திராட்சை பழங்களை வைத்து தோல்களை நீக்க சொன்னான். அதற்கு திராட்சை தோல்களையுமா என்று கேட்டான் இளவரன். ஆமாம், திராட்சை தோல்கள் அவர் வாயில் சிக்கினால் எதிரில் இருப்பவன் செத்தான் என்றான். இளவரசன் யோசிப்பதற்குள் உடைகளை துவைத்து காயவைத்து சரியாக மடித்து இருக்க வேண்டும் என ஒருவன் துணி மூட்டையை கொடுத்தான்.

தன்னைத்தானே திட்டி கொண்டு அந்த வேலைகளை செய்து முடித்தான். அதற்குள் இளவரசர் உணவில் இருக்கும் சீரகத்தை தனியாக எடுக்க வேண்டும் என்றான் ஒருவன். கண்கள் பிதுங்கி வெளியே வரும் அளவுக்கு முழித்தான் இளவரசன். ஏன்.. ஏன் என்றான். அதற்கு அருகில் இருந்தவன் அவருக்கு உணவில் சீரகம் இருப்பது பிடிக்காது என்றான். அப்படியென்றால் அதை போடாமல் சமைக்கலாமே என்றான் இளவரசன். அப்படி செய்தால் ருசி இல்லை என பயங்கரமான தண்டனைகளை கொடுப்பார் என்றான். அவ்வளவு கொடுமைக்காரனா என இளவரசன் கேட்க, கொஞ்சம் சோம்பேறி அவ்வளவுதான் என சொல்லி முடித்தான். இளவரசனுக்கு ஒரு வேலை இல்லாமல் இவர்களே செய்து முடித்தால் நான் என்ன செய்வேன் என் பொழுதை போக்க என யோசித்து கொண்டே தனது அறைக்கு வந்தான். கொஞ்ச நேரத்திலே உணவு தயார் என செய்தி வர காலையில் இருந்து வேலை செய்த அலுப்பில் இருந்தான் இளவரசன்.

அந்த சோர்வான முகத்துடன், அவன் முன் வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டான். இதில் இருக்கும் சின்ன சின்ன உழைப்பும் அவன் கண் முன் வந்தது. அங்கிருந்த வேலையாட்களிடம் கனிவாக பேச ஆரம்பித்தான். அவனிடம் ஏதோ மாற்றம் இருப்பதை பணியாட்கள் புரிந்து கொண்டார்கள். அதன்பிறகு அவன் பல வேலைகளை தானே செய்து கொண்டான். இதனால் அவன் மனது நிம்மதியாக இருந்தது. சும்மா இருப்பதாக எந்த எண்ணமும் அவனுக்கு தோன்றவில்லை.


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed