Tuesday, August 27, 2024

பாட்டியை ஏமாற்றிய காக்கா.. இவரையும் விட்டுவைக்கலையா!

 ராஜ்ஜியத்தின் அரசர் தனது நாட்டை மிகவும் வளமாக வழி நடத்தினார். அவருக்கு மக்கள் மட்டுமில்லாமல் தனது நாட்டை சுற்றி இருக்கும் காடுகளும் வளமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்து வந்தார். அங்கு இருக்கும் விலங்குகளும் மன நிறைவாக கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்றனவா என அரசருக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது.


அப்போது காட்டுக்கே சென்று அதை தெரிந்துகொள்ள முடிவு செய்த அரசர், அங்கு சென்றதும் ராஜாவாக சிங்கம் கட்டுப்பாடுகளை வைத்து வழி நடத்துவதை பார்த்து பெருமிதம் கொண்டார். பின்னர் அங்கு நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்த அரசருக்கு எல்லா விலங்கினங்களும் சிங்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது தெரிந்தாலும் பறவைகள் சரியாக கட்டுப்படவில்லை என்பதை புரிந்து கொண்டார். ராஜ்ஜியத்திற்கு சென்று முதல் வேலையாக அறிக்கை ஒன்றை அறிவித்தார். அதில் நாட்டின் மக்களை வழிநடத்த நான் அரசனாக இருக்கிறேன். அதே போல காட்டில் ராஜாவாக சிங்கம் விலங்குகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஆனால் இதில் பறவைகள் சரியாக கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகையால் ராஜ்ஜியத்தில் உள்ள அணைத்து பறவைகளும் நாளை அரண்மணை கார்டனில் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது.

இந்த அறிவிப்பை கேட்டதும் பறவைகள் என்னவாக இருக்கும் என பயந்து போய் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டன. அங்கு காகமும் தனது கூட்டத்துடன் செல்ல மற்ற பறவைகள் வண்ண மயமா இருக்கும்போது காகம் மட்டும் கருப்பாக இருப்பதை பார்த்த மற்ற பறவைகளை காக்கை கூட்டத்தை ஏளனமாய் பார்த்தது.

அரசர் அந்த சமயம் அங்கு வர, சல சலப்பாய் இருந்த பறவைகள் கூட்டம் அமைதியாய் ஆகின. அரசர் அறிக்கையில் சொன்னவாறு பேச, பறவைகள் ஒரு சத்தமும் இல்லாமல் அடுத்து என்ன என்று கேட்டுக்கொண்டிருக்க, உங்களுக்குள் ஒருவரை அரசராக தேர்ந்தெடுக்க போகிறேன். அவர் சொல்வதுதான் இனி உங்களுக்கு வழிமுறை நாளை மறுநாள் மீண்டும் இங்கு வாருங்கள் என சொன்னதும் பறவைகள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு அங்கிருந்து சென்றன. அரசர் யாரை தேர்ந்தெடுக்க போகிறார் என மொத்த பறவைகள் கூட்டம் காத்திருக்க அந்த நாளும் வந்தது. அரசரை காண பறவைகள் செல்ல, வண்ணங்கள் நிறைந்த ஒரு வினோதமான பறவையை அரசர் அன்று கூட்டத்தில் பார்த்தார். பார்த்ததும் அவருக்கு அதன் மேல் ஈர்ப்பு ஏற்பட, அதை பறவைகள் இனத்திற்கு அரசராக அறிவித்தார். யார்டா இவன் புதிதாக இருக்கிறான் என பறவைகள் அந்த புதிய பறவை மீது கோவப்பட அரசர் அங்கிருந்து அனைவரையும் கலைந்து போக சொன்னார். பறவைகள் கூட்டத்தை கூட்டி வழிமுறைகளை அறிவிக்க பறவையின் அரசர் ஒரு இடத்தை சொல்ல எல்லா பறவைகளும் அங்கு கூடின. ஆனாலும் இதன் இறக்கைகள் பல பறவைகள் உடையது போல இருந்ததை கவனித்த சில பறவைகள் அரசர் என்றும் பாராமல் அதன் மேல் துருத்தி கொண்டிருந்த ஒரு சிறகை பிடுங்க அது கையோடு வந்தது. இதை பார்த்த மற்ற பறவைகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இவன் உண்மையில் வண்ண பறவையே இல்லை என மற்ற சிறகுகளையும் பிடுங்க அது ஒரு காகம் என வெட்ட வெளிச்சமானது. இதை பொருட்படுத்தாத காகம் நான் தான் அரசன் என் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என தீர்மானமாக சொன்னது. மற்ற பறவைகளை மட்டுமில்லாமல் அரசரையும் காகம் ஏமாற்றியது தெரியவந்தது. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காகமும் பறவைகள் கூட்டத்தை சிறப்பாக வழிநடத்தியது. அதனால் அதை கேலி செய்த பறவைகள் கூட்டம் மனம் வருந்தின.


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed