Showing posts with label KATTURAI. Show all posts
Showing posts with label KATTURAI. Show all posts

Sunday, July 21, 2024

காமராஜர் பற்றிய பேச்சு 10 வரிகள்

 

காமராஜர் பேச்சு பற்றி 10 வரிகள்:

காமராஜர் ஜூலை 15-ம் தேதி 1903 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் குமாரசாமிக்கும், சிவகாமியம்மைக்கும் மகனாக பிறந்தவர்.

 

இவருடைய இயற்பெயர் காமாட்சி, இவரின் தாயார் செல்லமாக ராஜா என்று அழைப்பார். இதுவே கால போக்கில் காமராஜர் என்று ஆகிவிட்டது.

காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்

காமராஜருக்கு 18 வயது இருக்கும் போது அரசியலில் சேர வேண்டும் என்று நினைத்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்தார். இவர் முதலமைச்சராக இருந்த போது மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

தொழில், கல்வி, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்காக பெரிதும் பங்காற்றி உள்ளார். 1976 ஆம் ஆண்டு காமராஜர் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.

முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். பள்ளிக்குழந்தைகளுக்குஇலவச மதிய உணவு திட்டத்தினையும் அமல்படுத்தினார். ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது. இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுக்குள் மதராஸில் நீர்ப்பாசன அமைப்புகளை விரைவாக முடித்து ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார வசதியையும் வழங்கினார்.

1964-ஆம் ஆண்டு ஜவர்கர்களால் நேரு மரணம் அடைந்தவுடன் லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966-ம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணம் அடைந்தவுடன்  48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார், காமராஜர்.

 

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்  தேதி தன்னுடைய 72-வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதானபாரத ரத்னா விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. இவர் தனது வாழ்நாள் கடைசி வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.

உன்னைப்போல அரசியல்வாதி இனி உலகில் பிறக்கப்போவதும் இல்லை, உன்னைத்தவிர உனக்கு நிகர் வேறுயாரும் இல்லை

 


விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை | Kalpana Chawla Katturai Tamil

முன்னுரை:

  • விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.

இளமையும், கல்வியும்:

  • கல்பனா சாவ்லா 1961-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.

  • இவர் தனது ஆரம்ப கல்வியை அரசுப்பள்ளியில் பயின்றார். தனது கல்லூரி படிப்பை பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான துறையில் இளங்கலை பட்டம் பயின்றார். முதுகலை மற்றும் முனைவர் படிப்பை அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் பயின்றார்.

சாதனைகள்:

  • நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.

  • இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.

  • அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளிப் பயணம்:


  • விமானம் மற்றும் கிளைடர்களை 1988-ல் மற்றவர்களுக்கு பயணிக்க கற்று கொடுப்பதற்கான சான்றிதழ் மற்றும் அவர் பயணிப்பதற்கான உரிமத்தை பெற்றார் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் 1995-ல் நாசா சென்றார்.

  • கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் செய்தார்.

  • இவரின் இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003-ம் ஆண்டு நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் ஏழு பேர் பயணித்தனர். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை முடிப்பதற்கு பதினாறு நாட்கள் ஆனது.

முடிவுரை:

  • பல சாதனைகளை படைத்த கல்பனா சாவ்லா தனது இறுதி கட்ட விண்வெளிப் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது விண்கலம் வெடித்து சிதறி உயிரிழந்தார். இந்த நிகழ்வில் கல்பனா சாவ்லா மட்டுமல்ல அவருடன் சென்ற ஏழு பெரும் உயிரிழந்தனர்.

  • விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை பல மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

  • முயற்சியும் தைரியமும் இருந்தால் இவ்வுலகை மட்டுமல்ல வானுலகையும் ஆளலாம் என்று உலகிற்கு உணர்த்தி காட்டிய ஒரு சிறந்த பெண்மணி கல்பனா சாவ்லா.

இந்திய சுதந்திர தினம் பற்றிய 10 வரிகள்.!

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆங்கிலேயரின் அடிமை தனத்தில் இருந்து இந்திய மக்களை மீட்க பல தியாகிகள் தங்கள் இன்னுயிரை தந்து அயராது பாடுபட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இவர்களின் உயிர் தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் சுதந்திர தினத்தை முதன் முதலில் ஜவகர்லால் நேரு அவர்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றி கொண்டாடினார். எனவே, பள்ளி மாணவர்கள் இந்திய சுதந்திர தினம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்திய சுதந்திர தினம் பற்றிய 10 வரிகளை பின்வருமாறு தொகுத்துள்ளோம்.

 

200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு, 15 ஆம் தேதி அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது.

நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், செங்கோட்டையில் முதல் முறையாக இந்தியக் கொடியை ஏற்றினார்.

அதன் பிறகு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசிய விடுதலை நாள் ஆகும்.

இந்தியா சுதந்திரம் பெற அயராது பாடுபட்ட இந்திய போராட்ட வீரர்கள்.!

இது நாட்டின் சுதந்திரத்திற்கான போரட்டத்தை நினைவுபடுத்தும் வகையிலும் நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும் நினைவுபடுத்தும் வகையிலும்  கொண்டப்பட்டு வருகிறது.

 

இந்திய சுதந்திர தினம், நாட்டு மக்களிடையே தேசிய உணர்வு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை தூண்டி ஒற்றுமையை ஏற்படுத்துகிறது.

 

இந்நாளில், நமது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில், நம் நாட்டிற்க்காக  தங்கள் இன்னுயிரை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்த நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் வகையில் மூவர்ணக்கொடி ஏற்றி வணங்குகிறோம்.

 

நமது மதம், கலாச்சாரம் மற்றும் ஜாதி வேறுபாடின்றி ஒவ்வொரு இந்தியனும் இந்தியன் என்ற உண்மையைக் கொண்டாட ஒன்று கூடி இவ்விழாவை கொண்டாடுகிறார்கள்.

 

ஆகஸ்ட் 15 ஆம் நாள், பல நாடுகளில்இந்திய தினம்என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

 

இன்று கல்வி, விளையாட்டு, போக்குவரத்து, வணிகம் என எல்லாத் துறைகளிலும் இந்தியா சுதந்திரம் பெற்றிருப்பது நம் முன்னோர்களின் பல ஆண்டுகாலப் போராட்டத்தால் தான். 1947 க்கு முன்,இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக இருந்தனர் மற்றும் அவர்களின் அனைத்து கட்டளைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 

இதனை அறிந்த மகாத்மா காந்தி, தாதாபாய் நௌரோஜி, சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற பல தியாகிகள் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தனர்.

 

இன்று நம் இந்தியாவில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் சுதந்திராமகவும் இருப்பதற்கு காரணமாக இருந்த அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் புகழ் என்றென்றும் வாழ்க.!

 


Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed