Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 5

 

21. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

விடை: கண்

22. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

விடை: விக்கல்

23. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

விடை: செருப்பு

24. உணவு கொடுத்தால் வளரும் நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?

விடை: நெருப்பு

25.நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

விடை: தென்றல்

26. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?

விடை: வானம்

27. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?

விடை: குளிர்

28. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?

விடை: சூரியன்

29. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?

விடை: தொட்டா சுருங்கிச் செடி

30. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

விடை: பம்பரம்

No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed