Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 3

1. அமைதியான பையன் ஆனால் அடிக்காமலேயே அழுவான் அவன் யார்?

விடை: ஐஸ் கட்டி 

2. சின்னச் சின்ன அறைகள் உண்டு, இது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் சித்திரமும் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. கோட்டையும் அல்ல அது என்ன?

விடை: தேன் கூடு 

3. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்.. ஒருவன் நடப்பான் அவன் யார்?

விடை: கடிகாரம்

4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

விடை: உப்பு 

5. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?

விடை: குடை 

6. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?

விடை: மீன் வலை 

7. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?

விடை: தொலைபேசி

8. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?

விடை: அலாரம்

9. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்நான் யார்?

விடை: அஞ்சல் பெட்டி 

10. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

விடை: நிலா 


No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed