Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal - 20

1. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன?

விடை: தேங்காய்

2. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை.

அது என்ன

விடை: வானொலி பெட்டி

3. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?

விடை: சோளப்பொத்தி

4. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?

விடை: பாம்பு

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

விடை: அஞ்சல் பெட்டி.

6. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன?

விடை: சூரிய காந்தி 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed