Sunday, July 21, 2024

விடுகதைகள் | Vidukathaigal – 9

 

விடுகதை வினா விடைகள்

1) ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது?

1) குளம்

2) கிணறு

3) வாய்

4) மாதுளம்பழம்

 

2) விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?

1) மனித கை

2) உலக்கை

3) விலங்குகளின் கை

4) வானம்

 

3) நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?

1) நாற்காலி

2) வாங்கில்

3) மேசை

4) வீடு

 

4) மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?

1) காய்

2) பூ

3) இலை

4) விழுது

 

5) முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?

1) நிலா

2) நட்சத்திரங்கள்

3) வானம்

4) முகில்

 

6) அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்?

1) பூமி, சந்திரன்

2) சூரியன், புதன்

3) சூரியன், சந்திரன்

4) பூமி, சூரியன்

 

7) பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?

1) கணினி

2) வானொலிப் பெட்டி

3) தொலைக்காட்சி

4) தொலைநகல்

 

8) நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?

1) வானம்

2) நிழல்

3) கோமாளி

4) முகம் பார்க்கும் கண்ணாடி

 

9) கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்?

1) வெங்காயம்

2) மிளகாய்

3) மாம்பழம்

4) வாழை

 

10) தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?

1) கறி

2) சோறு

3) உப்பு

4) சீனி

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed