Wednesday, December 13, 2023

சுவாமி விவேகானந்தர் கதைகள் – ராக்ஃபெல்லருக்கு வழங்கிய அறிவுரை!

 அப்போது சுவாமி விவேகானந்தர்அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார்அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார்ராக்ஃபெல்லர்பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார்விவேகானந்தரைச் சந்தித்தபோதுராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லைராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர்விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள்எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார்என்றாலும் ஏனோ அவர்விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார்விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்றுசொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார்அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார்அப்போது ஒருநாள் திடீரென்றுவிவேகானந்தரைச் சந்திக்க வேண்டும்என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.

அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார்அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான்அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டுராக்ஃபெல்லர் முன்அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கிவந்தது யார்என்று பார்க்கவில்லைஇவ்விதம் சிறிது நேரம் கழிந்ததுதலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் – தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் – திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்இறுதியில் அவர்உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லைஉலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.

அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்அவ்வளவுதான்எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார்இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லைநான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதாஎன்று அவருக்குத் தோன்றியதுஎனவே அவர்நன்றிவணக்கம்சென்று வருகிறேன் என்றுகூட எதுவும் சொல்லாமல்வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார்ஆனால் விவேகானந்தரின் ஆன்மிகசக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்ததுஒரு வாரம் கழிந்திருக்கும்ராக்ஃபெல்லர்பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதிஅதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார்முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன்அனுமதியின்றிவிவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக்கொண்டிருந்தார்ராக்ஃபெல்லர்தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசிஇதோஇதைப் படித்துப் பாருங்கள்இப்போது உங்களுக்குத் திருப்திதானேநீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்என்று கூறினார்விவேகானந்தர் அசையவும் இல்லைராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லைஅவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார்படித்து முடித்ததும் அவர்நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லைநீங்கள்தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும்ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில்நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார்எனவே அவர்தாம் விவேகானந்தருக்குநன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed