Thursday, November 23, 2023

பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

 தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லைஅந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியதுமக்கள் பசியால் வாடினர்நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயாபெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம்சிறுவர்சிறுமியர்கள் என்ன செய்வர்இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன்என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர்தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள்ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும்கூடவும் கூடாதுகுறையவும் கூடாதுநாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள்வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான்அங்கே காத்திருந்த சிறுவர்சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர்கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்ஆனால்ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்எல்லோரும் எடுத்துச் சென்றது போகமிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்ததுஎல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்ஐந்தாம் நாளும் அப்படியே நடந்ததுஎஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமிதன் வீட்டிற்கு வந்தவள்தன் தாயிடம் அதைத் தந்தாள்அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய்அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயாஇது உங்கள் தங்கக் காசுரொட்டிக்குள் இருந்ததுபெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள்அவள். ”மகளேஉன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர்சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள்மகளே உன் பொறுமைக்கும்நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசுமகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர்துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள்நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவேநாமும் பொறுமையாகவும்நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed