Thursday, November 23, 2023

கோழிக்குஞ்சு!

 

செவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டதுஅந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்ததுஇருபத்தியோராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தனமூன்று முட்டைகள் அப்படியே இருந்தனசெவலைக்கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்ததுஒன்றும் அசையவில்லைஅந்த முட்டைகளை அடைகாத்த கூட்டிலிருந்து தள்ளிவிட்டதுஅந்த மூன்று முட்டைகளும் கூமுட்டைகள். (செவலைக்கோழி உண்ணாமல் உறங்காமல் அடைகாத்துப் பொரித்த அந்த ஏழு குஞ்சுகளையும் பெருமையுடன் பார்த்தது.)  

 

ஒரு குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு செவலை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு கறுப்பு நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு கறுப்பில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு வெள்ளையில் கறுப்புப் புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு சாம்பல் நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு செவலையும் கறுப்பும் கலந்து இருந்தது.

 

எல்லாக் குஞ்சுகளும் கிய்யா..கிய்யாகிய்யாகிய்யா.. என்று குரல் எழுப்பிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன

தாய்க்கோழி ``கெக்கெக்கெக் எல்லோரும் வாங்க’’ என்று கத்தியதுஉடனே எல்லாக் குஞ்சுகளும் தாய்க்கோழியின் அருகில் வந்து நின்றனஆனால்சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் வரவில்லைஅந்தக் குஞ்சு அப்படியே உலாத்திக்கொண்டிருந்ததுதாய்க்கோழிக்குக் கோபம்உடனே கொஞ்சம் சத்தமாய், ``க்ர்ர்ர்ர்ர் எனக்குக் கோபம் வந்துருச்சி.. உடனே வா...” என்று கத்தியது.

தாய்க்கோழியிடமிருந்து விலகியிருந்த சாம்பல் நிறக்குஞ்சு மெல்ல அலட்சியமாய் நடந்து வந்து அருகில் நின்றதுதாய்க்கோழி சாம்பல் நிறக்குஞ்சை முறைத்துப் பார்த்ததுஆனால்அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை சாம்பல் நிறக்குஞ்சு

செவலைக்கோழி குஞ்சுகளிடம்,

குழந்தைகளே நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்கங்க..

நான்  ‘கெக்னு சொன்னா கவனம்னு அர்த்தம்

கேகெக்கேகேகே’ னு கூப்பாடு போட்டா ஆபத்து ஆபத்து ஓடி வாங்க!னு அர்த்தம்.

 ‘
கெ...கெ...கெ...’னு மெள்ளக் கூப்பிட்டா இரை இருக்கு வாங்கன்னு அர்த்தம்..  

இன்னிக்கு இது தான் உங்களுக்குப் பாலபாடம்எல்லோரும் கேட்டுக்கிட்டீங்களா? “என்று பேசியதுஅம்மா சொல்வதை எல்லாக் குஞ்சுகளும் ஆர்வத்துடன் கேட்டனசாம்பல் நிறக்குஞ்சு மட்டும் காதில் வாங்காமல் வாய்க்குள்ளேயே கிய்கிய்யா...கிய்யா... கிய்கிய்யா...கிய்யா... என்று பாட்டுப்பாடிக் கொண்டிருந்ததுசெவலைக் கோழிக்குக் கவலையாக இருந்ததுஇப்படி அலட்சியமாக இருக்கே இந்தச் சாம்பல் நிறக்குஞ்சு என்று.  

 

செவலைக்கோழி குஞ்சுகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

கறுப்பு நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளை நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
கறுப்பு வெள்ளைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளைக்கறுப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்கறுப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
சாம்பல் குஞ்சு மட்டும் அம்மா சொன்னதைக் கேட்கவில்லை
சாம்பல் குஞ்சு கண்டபடி அலைந்து திரிந்ததுஇரை தேடியது.

அன்று காலை செவலைக்கோழியும் குஞ்சுகளும் இரைதேடி குப்பைமேட்டைக் கிண்டிக்கொண்டிருந்தனமேலே வானத்தில் பருந்து தன் நீண்ட சிறகுகளை விரித்துப் பறந்து கொண்டிருந்ததுஅந்தப் பருந்தின் நிழல் கீழே பூமியில் விழுந்ததைப் பார்த்தது செவலைக்கோழிஉடனே செவலைக்கோழிகேக்கேக்கேக்கே என்று அபாய எச்சரிக்கையை எழுப்பியதுஉடனே எல்லாக் குஞ்சுகளும் அங்கங்கே கிடைத்த புதர்களுக்குள் பதுங்கிக் கொண்டனசெவலைக்கோழி சாம்பல் குஞ்சைத் தேடியதுகாணவில்லை

 

சிலநொடிகளுக்கு அப்புறம் சாம்பல் குஞ்சு ஒரு செடியின் மறைவிலிருந்து ஹாயாக கிய்கிய்யா கிய்கிய்யா கிய்கிய்யா என்று பாடிக்கொண்டே வெளியில் வந்ததுஅது என்ன என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் சாம்பல் குஞ்சின் மீது பருந்தின் நிழல் விழுந்தது.

ஐயோ… ஆபத்து வந்து விட்டதே… பருந்தின் இறகுச்சத்தம் சாம்பல் குஞ்சின் காதில் கேட்டதுஅவ்வளவுதான் உயிர் போகப்போகிறதுஇதோ பருந்தின் கால்களில் உள்ள கூர் நகங்கள் உடலைக் கிழிக்கப் போகின்றனஎன்ன செய்வது என்று சாம்பல் குஞ்சுக்குத் தெரியவில்லைஅப்படியே கண்களை மூடி உட்கார்ந்துவிட்டதுகிய்யா கிய்யா கிய்யா... 

 

அப்போது ஆவேசமாய் செவலைக்கோழி பறந்து வந்து பருந்தின் மீது மோதியதுபருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து புரண்டதுஎன்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே மேலே எழுந்து பறந்து போனது பருந்து.

சாம்பல் குஞ்சின் அருகில் செவலைக்கோழி நின்றதுகண்களை மூடிப் பயத்துடன் உட்கார்ந்திருந்த சாம்பல் குஞ்சின் தலையில் தன் அலகுகளால் மெல்லத் தடவியதுசாம்பல் குஞ்சுக்கு அப்போதுதான் உயிர் வந்தது.

இப்போது செவலைக்கோழியின் சத்தத்துக்கு முதலில் வந்து நிற்பது யார் தெரியுமா?

நீங்களே சொல்லுங்களேன்...  

 

 

No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed